search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர்கள் பலி"

    • பழவேற்காடு கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற மீனவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    சென்னை திரிசூலத்தைச் சேர்ந்தவர் மதன் குமார். என்ஜினீயரான இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பணிபுரியும் நண்பர்கள் என்ஜினீயரான அருண், எபினேசர் உள்ளிட்ட 10 பேருடன் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.

    பின்னர் அவர்கள் பழவேற்காடு கடலில் படகு சவாரி சென்றனர். அப்போது மதன் குமார், அருண், எபினேசர் ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர்.

    ஆழமான பகுதிக்கு சென்ற அவர்களை அலை இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர்கள் மற்றும் அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றபோது எபினேசரை மட்டும் பத்திரமாக மீட்டனர். மதன் குமாரும், அருணும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தேடிவந்தனர்.

    இதற்கிடையே சிறிது நேரத்தில் அதே பகுதியில் மதன்குமார் உடல் பிணமாக மிதந்தது. தகவல் அறிந்ததும் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலில் மூழ்கிய அருணை தொடர்ந்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் வலை கம்பில் அருணின் உடல் சிக்கியது. அவரது உடலை போலீசார் மீட்டனர். பழவேற்காடு கடலில் மூழ்கி என்ஜினீயர்கள் 2 பேர் பலியான சம்பவம் உடன் வந்த நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்துச் சென்ற மீனவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×